வேறு ஊடகங்களில் வெளிவந்த, முக்கிய செய்திக் கட்டுரைகள், அவற்றின் உள்ளடக்க முக்கியத்துவம் கருதி, இந்தப் பகுதியில் பதிவு செய்யப்படுகின்றது. - 4TamilMedia Team
"குறி வைக்கப்பட்டுள்ள இன்னுமொரு லசந்த - நசுக்கப்படும் மனித உரிமைகளும் ஊடகத்துறையும் !" எம்.ரிஷான் ஷெரீப் எழுதியுள்ள இந்தக் கட்டுரை சிறிலங்காவின் ஊடக சுதந்திரத்தின் நிலை குறித்து உண்மை பேசும் மற்றுமொரு பதிவு. அந்தவகையில் அவருக்கும், இக்கட்டுரையை முதலில் வெளியிட்ட 'உயிரோசை"க்கும் நன்றி தெரிவித்து இங்கு மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team
எழுபதுகளில் தொடங்கி தமிழ்ப் புதுக்கவிதையில் எண்ணற்ற புரட்சிக் கவிதைகளை எழுதியவர் எழுச்சிக் கவிஞர் தணிகைச் செல்வன். 1975-ல் தொடங்கி 2000 வரை வெளிவந்திருக்கும் எட்டு கவிதைத் தொகுப்புகளும் இணைந்து இன்று 600 பக்கங்களில் "தணிகைச் செல்வன் கவிதைகள்' என்ற முழுத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.
தமிழை சிறப்புப் பாடமாகக் கல்லூரியில் பயிலாத தணிகைச் செல்வன், தனது சுயமுயற்சியால் தமிழ் இலக்கியம், இலக்கணம் கற்று, யாப்பின் வலிமை உணர்ந்த வெகுசில கவிஞர் களில் ஒருவராக- தமது புதுக்கவிதைகளில் யாப்பின் ஆன்மாவைப் பொதிந்து வைக்கும் தனித்துவம் மிக்கவராக இன்றுவரை எழுதி வருகிறார்.
1975-ல் நெருக்கடி காலம் அமலில் இருந்தபோது இவர் உருவாக்கிய "உரைவீச்சு' எனும் உரையும் கவிதையும் கலந்த புதிய இலக்கிய வடிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களில் அலை அலையாக தொண்டர் களைத் திரட்ட உதவியது. தொடக்க கால மார்க்சிஸ்ட் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த தணிகைச் செல்வனின் உரைவீச்சு பெரிய காரணமாக இருந்தது.
திராவிட இயக்கத்தில் வளர்ந்து, பொதுவுடமை இயக்கத்தில் கலந்து, தற்போது கலப்படமற்ற துய மார்க்சியராக சென்னை தாம்பரத்தில் வாழ்ந்து வரும் தணிகைச் செல்வன், இந்திய தேசியம் என்பது ஒரு கற்பனை என்பதையும், தேசங்களின் தன்னுரிமையே இன்றைய அரசியல் தேவை என்பதையும், தேசியம், மார்க்சியம் இரண்டையும் இணைப்பதன் மூலமே தன்னுரிமையை அடைய முடியும் என்ற மாபெரும் ஆய்வை மூன்றாண்டு காலம் விரிவாக முன்னெடுத்து, "தேசியமும் மார்க்சியமும்' என்ற ஆய்வு நூலைப் படைத்திருக்கிறார்.
கடந்த காலத்தில் நின்று பொழுதைப் போக்காமல், எதிர்காலத்தின் "உட்டோப்பியா' கனவுகளில் மூழ்கிவிடாமல், சமகால மனிதனின் வாழ்வை - அவனது அவலத்தைப் பாடும், அநீதிகளைப் பாரபட்சம் இல்லாமல் கவிதை களில் சாடும் தணிகைச் செல்வன் ஒரு கவிஞர் மட்டுமல்ல, தீவிர கட்டுரையாளரும் கூட.
மார்க்சியம், பெரியாரிசம், தலித்தியம், தமிழியம் சார்ந்து ஆழமான ஆய்வுகள், தரவுகளுடன் விவாதிப்பவை இவரது கட்டுரைகள்.
எதையும் ஆழமாகவும் கூர்மையாகவும் நோக்கும் உணர்வாளரான கவிஞர் தணிகைச் செல்வனின் எழுத்துக்கு இயக்கங்களைக் கடந்த அபிமானிகள் ஏராளமாய் இருக்கிறார்கள். அனைவருமே இவரை நேசிக்கிறார்கள். நக்கீரன் குழுமத்திலிருந்து வெளிவரும் "இனிய உதயம்' இதழுக்காக அவர் அளித்த செவ்வி இது. இதை இன்றைய ஈழதேசியப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் ஒரு ஆவணம் என்ற வகையில்,' இனிய உதயம்' சஞ்சிகைக்கும், நேர்காணல் செய் செய்தியாளர் ஆர்.சி.ஜெயந்தன் அவர்களுக்குமான நன்றியறிதல்களோடு இங்கே மீள பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team
தெலுங்கானா! அன்மைக்காலத்தில் இந்திய மத்திய அரசை அதிர வைத்திருக்கும் சொல். அரசியல் சித்து விளையாட்டில் பலியாகும் மாநிலங்களின் தனித்துவம், மக்களின் உரிமைகள் மரித்துப் போகின்றன. உண்மையில் இந்தப் பிரச்சனையின் ஆழம் என்ன? இந்தப் பிரச்சனையின் தொடக்கத்திலிருந்து ஆராய்ந்து பார்க்கும் வகையில் இக் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது. அந்த முக்கியத்துவம் கருதி, அதனை வெளியிட்டுள்ள 'இனியொரு..' இணையத் தளத்திற்கும், கட்டுரையாளருக்கும், நன்றி தெரிவித்து இங்கே மீள் பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team.
ஜனாதிபதி தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சிறிலங்கா வரலாற்றில் ஒருபோதும் இல்லாதளவுக்கு கடும் போட்டியை எதிர்நோக்கும் தேர்தல் என்று கருதப்படுவதனால் இரு பிரதான வேட்பாளர்களும் பரபரப்புடன் செயற்படத் தொடங்கிவிட்டனர். பரஸ்பரம் இரு தரப்பினரிடமிருந்தும் ஆட்களைக் கழற்றி எடுக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
இலங்கையின் நடந்து முடிந்துள்ள யுததத்தில் இந்தியாவின் பங்கு எவ்விதமாக இருந்தது எனப் பல்வேறு சந்தர்பங்களில் வெளிப்பட்ட போதும், அவற்றக் கெதிராக யாரும் எதையும் செய்துவிட முடியவில்லை. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் யு்த்தத்தினால் அளவுக்கதிமாக அச்மடைந்திருப்பது இந்தியா என்றே கருதப்படுகிறது. இந்த நிலையில் நிலைமையைத் தனக்குச் சாதகமாக்க இந்தியா எதுவும் செய்யும் என்பதனை இந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. அதனை முழுமையாக இங்கே பதிவு செய்கின்றோம். -4Tamilmedia Team.