விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இலவச நியூஸ்லெட்டர்..
லைவ் ஸ்கோர் காட்
| யுவராஜ் அதிரடி சதம் - மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா |
| Written by Sara |
| Saturday, 27 June 2009 10:32 |
இந்திய மேற்கிந்திய அணிகளுக்கு இடையே, ஜமைக்காவில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ICC யின் 20Twenty உலக கிண்ண போட்டிகளில் பிரகாசிக்கத்தவறிய இந்திய அணி, சூப்பர் 8 உடன் வெளியேறி ரசிகர்களிடையே பலத்த ஏமாற்றத்தை தந்திருந்தது. இந்நிலையிலேயே மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடிய இம்முதலாவது போட்யில் இந்தியாவின் அபார துடுப்பாட்டம் ரசிகர்களிடையே மீண்டும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 339 ரன்களை எடுத்தது. ஆரம்பதுடுப்பாட்டக்காரராக களமிறங்கிய கார்த்திக் 67 ரன்களை குவித்தார். கப்பன் தோனி 41 ரன்களை குவித்தார். எனினும் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் யுவராஜ் சிங் 102 பந்துகளில் 131 ரன்களை எடுத்தார். 10 பவுன்றிகள் 7 சிக்ஸர்கள் அடங்களாக இந்த சதம் அமைந்திருந்தது. இறுதியாக களமிரங்கிய பதான், ஹர்பஜன் சிங் ஜோடியும் 4 ஓவர்கள் மிகுதியிருந்த வேளையில் களமிறங்கி 41 ஓட்டங்களை அதிரடியாக குவித்தனர்.இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 339 ஓட்டங்களை குவித்தது இந்திய அணி. பந்துவீச்சில் பிராவோ 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பம் முதலே நிதானமான துடுப்பாட்டத்தை ஆடி வந்தது. ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான கிறிஸ் கெய்ல் (37), மோர்ட்டன் (42), சர்வன் (45), சந்திரபோல் (63), என அடுத்தடுத்து அனைவரும் சிறப்பான ஓட்டங்களை குவித்தனர். எனினும், நெஹ்ரா, பதான் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சினால் தடுமாறத்தொடங்கியது மேற்கிந்திய தீவுகள். 16 பந்துகளில் 23 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கவிருந்த நிலையில் 9 விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டிருந்தது. இறுதியில் மிகுதி 2 ஓவர்கள் உள்ள வேளை, அனைத்து விக்கெட்டுக்களையும், இழந்து 319 ரன்களை மாத்திரமே பெறமுடிந்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற நிலையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. யுவராஜ் சிங் இப்போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். |
| Last Updated on Saturday, 27 June 2009 10:44 |
- அசின் வருகை, இடம்பெயரும் அணுஷ்கா!
- மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய அரசின் மீது போர் தொடுத்துள்ளார்கள் - ப.சிதம்பரம்
- நின் தரிசனம் நாடி
- தேசியக் கொள்கையில் உறுதி கொண்டவர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி
- பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?
- அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமைபற்றிப் பேச அருகதையற்றவை - சம்பிக்க ரணவக்க
- சிலியில் மீண்டும் நிலநடுக்கம்


.jpg)
டுவிட்டர் 
இந்திய மேற்கிந்திய அணிகளுக்கு இடையே, ஜமைக்காவில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ICC யின் 20Twenty உலக கிண்ண போட்டிகளில் பிரகாசிக்கத்தவறிய இந்திய அணி, சூப்பர் 8 உடன் வெளியேறி ரசிகர்களிடையே பலத்த ஏமாற்றத்தை தந்திருந்தது. இந்நிலையிலேயே மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடிய இம்முதலாவது போட்யில் இந்தியாவின் அபார துடுப்பாட்டம் ரசிகர்களிடையே மீண்டும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உங்கள் கருத்துக்கள்