பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சிறிலங்கா இரானுவத்தின் திட்டத்தில் மீண்டும் ஒரு இனப்படுகொலையா..?
Written by editor   
Thursday, 24 December 2009 19:34
AddThis Social Bookmark Button

வன்னிப் போரின் பின், சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த , முன்னாள் போராளிகளை, இரகசிய முகாம்களில் தடுத்துவைத்திருக்கிறது சிறிலங்கா அரசு.  இவ்வாறு தடுத்து வைத்திருக்கும் முன்னாள் போராளிகள் பலரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளதாக  கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரினால், மனித உரிமை ஆர்வலர் ஒருவருக்குத் தெரிவிக்கபட்ட இரகசியத் தகவலாகவே  இச் செய்தி வெளிவந்துள்ளது. இராணுவத்தை அரசாங்கம் தவறாக வழிநடத்துவதாகக் கருதும்  இராணுவ அதிகாரிகள் சிலர், தங்கள் உயரதிகாரிகளுக்குத் தெரியாமல்  இரகசியமாக இத்தகைய தகவல்களை, மனித உரிமை ஆர்வலர்களுக்குத் தெரிவித்து வருகிறார்களாம். அத்தகைய ஒரு அதிகாரியினாலே இத்தகவல் வெளிவந்திருப்பதாக நம்பப்படுகிறது.

இந்தச் செய்தியை அறியும் போது, இது சாத்தியமா எனக்கேள்வி எழுந்தாலும்,  இது போன்ற  வேறு பல உத்திகள் வன்னிச் சமர்க்களத்திலும் பாவிக்கப்பட்டிருப்பதாகவே தெரியவருகிறது. மிக நுட்பமாகவும், அரசாங்கம் மீது பழி வராதவகையிலும் இப் படுகொலையினை நிகழ்த்த திட்டமிட்டிருப்பதாக அச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

இதன்படி சிறைப்படுத்தப்பட்டுள்ள போராளிகளை  மீட்டெடுக்கும் ஒரு முயற்சி ஒன்றினை போலியாக   நடைபெற வைக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்துக்கு முன்னாள்  போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம் மீது, இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் மற்றுமொரு முன்னால் போராளிகளைப் பாவிக்கவும்,  இந்த நடவடிக்கையின் போது, தம்முடன் சேர்ந்தியங்கும் போராளிகளையும், இராணுவத்தினர் போட்டுத் தள்ளத் திட்ட மிட்டிருப்பதாகவும் அத் தகவல்கள் தெரிவிப்பதாக அறியப்படுகிறது.

சிறிலங்கா அரசு, வன்னிப்போர் முடிந்து ஆறு மாதகாலத்துக்கு மேலாகிய பின்னும், தடுத்து  வைத்திருக்கும் இப் போராளிகளை எந்தவொரு மனித உரிமை அமைப்புக்களும் சந்திக்கவோ, அல்லது இவர்கள் குறித்த பெயர் விபரங்களை வெளியிடவோ  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின்  பொது வேட்பாளராக  நிறுத்தப்பட்டுள்ள  முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தனது தேர்தற் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில், அரச தரப்பின் மீதான பல போர்க்குற்றச்சாட்டுக்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற போராளிகளில் பலர் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது, வன்னிச் சமர்க்களத்தில் நின்றவர்கள். சரத் பொன்சேகா  தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு சாட்சிகளாக அமையக் கூடியவர்கள் என அரச தரப்பு அஞ்சுவதும்,  தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போராளிகளை முழுமையாக விசாரித்து அடையாளங் காணமுடியாதிருப்பதும், இதற்குக் காரணமாக இருக்கலாமெனவும் அச் செய்திகள் ஊகந் தெரிவிக்கின்றன. 

சீறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டிருக்கும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்றுமொரு இனப்படுகொலையாகஇருக்கும் எனக் கருதப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள்

avatar shruti
0
 
 
pls publish dis news in bbc
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 24 December 2009 21:15
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது