சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது - சமல் ஜயநித்தி
Written by editor   
Saturday, 14 November 2009 02:01
AddThis Social Bookmark Button

நேற்று வெள்ளிக்கிழமையன்று தமிழ் அரசியல் கைதிகள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் என இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளமை அதிகாரிகளால் மறைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.  கொழும்பு வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பாக கூறுகையிலேயே சமல் ஜயநித்தி இவ்வாறு தெரிவித்தார். 

இத்தாக்குதலானது ஏதேச்சையாக நடைபெறவில்லை. நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இங்கு கடமைபுரிந்த சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் தங்கியுள்ள சிறைக் கூடத்திற்கு சென்று மிகக் கேவலமான முறையில் நிந்தித்துள்ளனர்.  இவ்வாறு ஏன் எம்மை நிந்திக்கின்றீர்கள் எனக் கேள்வி கேட்ட போதே சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளாலும் பெரும்பான்மை இன கைதிகளாலும் தமிழ் அரசியல் கைதிகள் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.  

இத் தாக்குதலில் 8 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.  நாட்டில் இனவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு நாட்டுக்குள்ளும் பாதுகாப்பில்லை; சிறைச்சாலைக்குள்ளும் பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளது. 1970, 1980 களில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இன்று ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது. என்ன காரணம் வேறொன்றும் அல்ல தமிழர் என்பதே காரணமாகும்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 14 November 2009 02:44
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது