பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பாடசாலை செல்லாத 30,000 சிறுவர்கள் முகாம்களில்?
Written by Sara   
Friday, 03 July 2009 23:40
AddThis Social Bookmark Button
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து, மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில், சிறார்களின் எதிர்கால வாழ்வு மிகுந்த கேள்விக்குறியாகியுள்ளது.கடந்த வருடத்தின் பிற்பகுதியிலும், இவ்வருடத்தின் ஆரம்பம் முதலும், வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த தீவிரமான யுத்தத்தினால் இச்சிறார்களின் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தர, சாதாரண தர பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது கூட, ஷெல் தாக்குதல்களும், குண்டு வீச்சு தாக்குதல்களும் இவர்களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கி இருந்தது.
தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள போதும், இம்முகாம்களில் உள்ள சிறார்களின் கல்வி நடவடிக்கைகள் சீரற்ற முறையில் நடாத்தப்படுகின்றன. அரசாங்கத்தினால் சிறார்களுக்கான இல்லம், பிரத்தியேக கல்விக்கூடங்கள் என்பன, இப்பகுதிகளில் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுவதுடன், அதற்கான திறப்பு விழாக்களும் நடைபெற்று வந்தன.

எனினும், 30, 000 த்திற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் இன்னமும் இம்முகாம்களில் சாதாரண அப்பியாசக்கொப்பிகள் கூட இல்லாத நிலையில் காணப்படுவதால், பாடசாலைக்கும் செல்வதில்லை என தொண்டு நிறுவனத்தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாடசாலை சீருடைகள், கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகள் இல்லாத காரணத்தினால் இவர்கள் பாடசாலைக்கு செல்லப்படுதல் மறுக்கப்பட்டுள்ளதாக, அரச சார்பற்ற நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

வடக்கில் இம்முகாம் மக்களுக்காக பிரத்தியேக வணிக வியாபார நிலையங்கள், கூட்டுறவு திணைக்களங்களென, வர்த்தக இலாபம் கருதி பல ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற போதிலும், இச்சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்க எந்த வர்த்தகர்களும் முன்வரவில்லை எனவும், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே இச்சிறார்கள் பெற்றோர் பாதுகாவலர் இன்றி மிகுந்த மன உளைச்சளுக்கு உள்ளாகியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த சிறார் போராளிகள் என அரசு தரப்பினால் தெரிவிக்கப்பட்டு, புனர்வாழ்வு நிலையங்களுக்கு தனியாக அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.நாவின் செயலாளர் நாயகம், பான் கீ மூன் 'இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சிறார் போராளிகள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும், அவர்களை மீண்டும் தமது தேவைகளுக்காக பயன்படுத்துபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் 30,000 சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை முற்றாக பாதிப்படைய செய்து, அவர்களின் சுய அறிவுத்தேடலினை மழுங்கடிக்க செய்து வரும், அரசாங்க செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஐ.நா கேள்வியெழுப்பியிருக்கலாமே என ஆதங்கப்படுகிறது, இவ் இடம்பெயர்ந்தோர் நலனில் அக்கறை கொண்டுள்ள சமூகம்.

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் பின்னர் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள மக்களிடம் வெறும் கூடாரங்கள் மாத்திரமே இருப்பதாகவும் அவர்களிடம் வேறு எந்தப் பொருளும் இல்லை எனவும் டென்மார்க் அகதிகள் பேரவை கோடிட்டு காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 03 July 2009 23:52
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது