சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சர்வகட்சி குழுவில் இடம்பெயர் மக்கள் தொடர்பாக முக்கிய கவனம் - த.தே.கூ வும் கலந்துகொண்டது
Written by Sara   
Friday, 03 July 2009 06:01
AddThis Social Bookmark Button

அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக , ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவினால் அமைக்கப்பட்டுள்ள சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கலந்து கொண்டுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகள், இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியமர்த்துதல் தொடர்பாகவும் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் சிறிகாந்தா தலைமையில் த.தே.கூ இன் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் மக்கள் தொடர்பாகவே த.தே.கூ உம் கவனம் செலுத்தியிருந்தது. இம்மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும், அதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவு கிடைக்கும் எனவும் கூட்டமைபினர் தெரிவித்துள்ளனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சிகளின் பிரதிகளும், நல்லெண்ணத்தையும், அபிவிருத்தியையும் நோக்கமாக கொண்டு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக, ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நண்பகல் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. 'பயங்கரவாதத்தால் மறுக்கப்பட்டிருந்த மக்களின் உரிமைகள் அரசாங்கத்தின் மனித நேய நடவடிக்கைகளால் மீளப்பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.தற்போது அவர்களுக்கு உளரீதியாக ஏற்பட்டிருக்கும் காயங்களுக்கு மருந்து போடும் சூழ்நிலை தோன்றியுள்ளது. அபிவிருத்தியின்றிஅவர்களுக்கு இடையில் நல்லிணக்கங்களை மேற்கொள்ள முடியாது.' என ஜனாதிபதி தெரிவித்தார்.















உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 03 July 2009 06:24
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது